மனைவி வீட்டுக்கு வர மறுப்பு கணவர் விஷம் குடித்து தற்கொலை

நாகை,அக்.1:நாகூர் அருகே வடகுடிதோப்பு தெருவை சேர்ந்தவர் கண்ணன்(33). இவரது மனைவி வைஷ்ணவி(28). கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன் வைஷ்ணவி கோபித்து கொண்டு மயிலாடுதுறையில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். உடனே கண்ணன் மயிலாடுதுறை சென்று வீட்டிற்கு வரும்படி கூறினார். ஆனால் அவர் வர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபித்துக்கொண்டு கண்ணன் நாகூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். அன்று முதல் மனவேதனையாக இருந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை அருகில் இருப்பவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: