ரோசல்பட்டியில் உள்ள தீண்டாமை சுவரை அகற்ற ஆர்ப்பாட்டம்

விருதுநகர்,அக். 1: ரோசல்பட்டி ஊராட்சி அண்ணாநகரில் உள்ள தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி விருதுநகரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், தீஒமு மாவட்ட செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், ரோசல்பட்டி ஊராட்சி அண்ணாநகரில் உள்ள தீண்டாமைச் சுவரை அகற்ற வேண்டும். சுவர் கட்ட வழங்கப்பட்ட சட்டத்திற்கு புறம்பாக வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Related Stories: