நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சிக்கு 20 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தொடக்கம்

நாங்குநேரி, செப். 30:  நாங்குநேரியில் காங்கிரஸ் உறுப்பினர்கள் சேர்க்கை ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் பிரமுகர் ரூபி மனோகரன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கினர். முதற்கட்டமாக 20 ஆயிரம் படிவங்கள் தொகுதி முழுவதும் வழங்கப்பட்டது.  கூட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் மோகன் குமாரராஜா, நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, நகர தலைவர் சுடலைக்கண்ணு, வசந்தா, மகளிரணி மாவட்ட தலைவி தனிதங்கம், பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ்போர்டு, மாவட்ட துணைத்தலைவர்கள் தனபால், சந்திரசேகர், செல்லப்பாண்டி, வட்டார தலைவர்கள் நாங்குநேரி மேற்கு வாகைதுரை, களக்காடு அலெக்ஸ், பாளை. வடக்கு டியூக் துரைராஜ், தெற்கு கணேசன், நகர தலைவர்கள் களக்காடு ஜார்ஜ்வில்சன், ஏர்வாடி ரீமா பைசல், திருக்குறுங்குடி முத்துராஜ், ஓபிசி பிரிவு பொறுப்பாளர் ஜெஸ்கார்ராஜா, ராஜாசிங்,  செல்லபாண்டியன், முத்துகிருஷ்ணன், உடையார், செல்வராஜ், ஜெயக்குமார், இளைஞர் காங்கிரஸ் முத்துகிருஷ்ணன், மாசிலாமணி, ராபர்ட் சுஜின், ரபிக், கலுங்கடி ராஜா, வைகுண்டராஜா, முத்துராமலிங்கம், மாடசாமி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Related Stories: