ஆர்.எஸ்.மங்கலம், செப்.30: ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் உள்ள திருத்தேர் வளை மற்றும் ஆய்ங்குடி ஊராட்சி பகுதிகளில் ஓரு சில இடங்களில் மின்கம்பிகள் தாழ்வாகவும் சில இடங்களில் சாலையோரம் உள்ள மரங்களில் பின்னி பிணைந்து செல்கின்றன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. மின்சார வாரியத்தில் புகார் தெரிவித்து இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அப்பகுதியில் பொதுமக்கள் கூறுகையில், எங்களது பகுதியில் தாழ்வான நிலையில் செல்லும் மின்கம்பிகள் மற்றும் மரங்களில் பின்னி பிணைந்து செல்வது ஆறு மாதத்திற்கு மேலாக உள்ளது.