செய்துங்கநல்லூர். செப்.29: செய்துங்கநல்லூர் அருகே ஆறாம்பண்ணை கிராமத்தில் இடிந்த நிலையில் உள்ள ரேஷன் கடை கட்டிடத்தை அப்புறப்படுத்தி புதிய ரேஷன் கடை கட்டவேண்டும் என ஊர் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆறாம்பண்ணை கிராமத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ரேஷன் கடைகட்டிடம் இடிந்த நிலையில் காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் ரேஷன் கடைக்கு வர அச்சப்பட்டனர். இதையடுத்து ரேஷன் கடையை வேறு ஒரு கட்டிடத்துக்கு மாற்றி பொருட்கள் வழங்கி வருகின்றனர். இடிந்த ரேஷன் கடை கட்டிடத்தின் அருகே சிறுவர்கள் ஆங்காங்கே விளையாடி கொண்டிருப்பதால் அபாயநிலை உள்ளது.