நெல்லை, செப். 26: நெல்லை அருகே மணல் கடத்தல் கும்பல் மிரட்டியதால் விவசாயி விஷம் குடித்தார். அவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மானூர் அருகே உள்ள சுப்பையாபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (60). விவசாயியான இவர், வீட்டில் திடீரென விஷம் குடித்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு உடனடியாக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரது மகன் கலைச்செல்வம் (26), மாவட்ட எஸ்பியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மானூர் சுப்பையாபுரத்தில் விவசாயம் செய்து நாங்கள் பிழைத்து வருகிறோம். மணல் கடத்தல் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்ததால் எங்கள் ஊரைச் சேர்ந்த சிலருடன் எங்களுக்கு முன்விரோதம் ஏற்பட்டது.