புதுச்சேரி, செப். 25: புதுச்சேரியில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக நேற்று 668 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் மோகன்குமார் கூறுகையில், புதுச்சேரியில் நேற்று 5,945 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுவை-533, காரைக்கால்-99, ஏனாம்-27, மாகே-9 என மொத்தம் 668 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுவையில் 4 பேர், காரைக்காலில் 2 பேர் என 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 487 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.96 சதவீதமாக உள்ளது.