கந்தர்வகோட்டை, மார்ச் 18: கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தை கொரோனா வைரஸ் தாக்காத ஒன்றியமாக்க ஒன்றியம் முழுவதும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்க முன்னோட்டமாக கந்தர்வகோட்டையில் பொதுமக்களிடம் வழங்கி ஒன்றியக் குழு தலைவர் கார்த்திக் தொடங்கி வைத்தார். கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் கொரோனா வைரஸ் எவ்வாறு உருவாகிறது, அதற்கான அறிகுறிகள் என்ன, அவற்றை எவ்வாறு போக்குவது என்பது குறித்து விளக்கமாக துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டு, அவற்றை கந்தர்வகோட்டை நகர் பகுதிகளில் அரசு மருத்துமனை, கடைவீதி மற்றும் பேருந்து நிலையத்தில் கொடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.