நாகை,மார்ச்18: கொரோனா வைரஸ் குறித்து வீண்வதந்தியை சமூக வலைத்தளங்களில் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாகை கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் மனு அளித்தார். வேதாரண்யம் அருகே துளசியாபட்டினம் பகுதியை சேர்ந்தவர் இப்ராஹிம்ஷா. இவர் நேற்று நாகை கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் பிரவீன்பிநாயரை சந்தித்து மனு கொடுத்தார். இதில் கடந்த 8ம் தேதி சவுதிஅரேபியாவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்து இறங்கி எனது சொந்த ஊருக்கு வந்தேன். தானாக முன் வந்து நாகை அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை காரணமாக பரிசோதனை செய்தேன்.