அடிதடி வழக்கில் ஒருவர் கைது

பட்டிவீரன்பட்டி, மார்ச் 18: பட்டிவீரன்பட்டி அருகே எம்.வாடிப்பட்டியில் உள்ள முத்தாலம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் மதன்(35). இவரது வீட்டருகே ராஜாங்கம்(52) வசித்து வருகிறார். இந்த தெரு வழியாக சென்ற மினிலாரி உரசியதில் ராஜாங்கம் வீடு சேதமானது. வீட்டை சேதப்படுத்திய மினிலாரி நிற்காமல் சென்றுவிட்டது.

இதுசம்பந்தமாக பக்கத்து வீட்டில் வசிக்கும் மதனிடம் ராஜாங்கம் வாக்குவாதம் செய்துள்ளார். இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் முற்றி அடிதடியாக மாறியது. படுகாயமடைந்த மதன், வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இருவரும் கொடுத்த புகாரின்பேரில் மதன் மற்றும் ராஜாங்கம் ஆகிய இருவர் மீதும் பட்டிவீரன்பட்டி எஸ்ஐ கிருஷ்ணசாமி வழக்குப்பதிவு செய்து, ராஜாங்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: