திருச்சி, மார்ச் 16: திருச்சி புத்தூரில் மேம்படுத்தப்பட்ட சிகிச்சை வசதிகளுடன் சுந்தரம் மருத்துவமனை திறக்கப்பட்டது. திருச்சி புத்தூர் இ.வி.ஆர் மெயின் ரோட்டில் புதிதாக கட்டப்பட்ட சுந்தரம் மருத்துவமனை திறப்பு விழா நேற்று நடந்தது. டாக்டர் விவேக் சுந்தரம் மற்றும் டாக்டர் சில்பா விவேக் ஆகியோரால் விரிவுபடுத்தப்பட்ட மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை கமலா காந்தி, ராணிசுந்தரம், கஸ்தூரி மோகன், டாக்டர் பாஸ்கரன் கவுரி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். டாக்டர் மோகன் மற்றும் டாக்டர் கஸ்தூரியின் புதிய மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தை ராணிப்பேட்டை எம்எல்ஏ காந்தி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவை மங்களகிரி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் டாக்டர் ரவிக்குமார் திறந்து வைத்தார்.