மதுரை, மார்ச் 17: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மதுரையில் 32 நாளாக நேற்றும் முஸ்லிம்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் முஸ்லிம்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மதுரை மகபூப்பாளையத்தில் கடந்த பிப்.14ல் துவங்கிய காத்திருப்பு போராட்டம், நேற்று 32ம் நாளாக இப்பகுதியில் உள்ள ஜின்னா திடலில் தொடர்ந்தது.