பேராவூரணி, மார்ச் 17: பேராவூரணியில் கயிறு பொருட்கள் தொழிற்சாலை உரிமையாளர் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைவர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார். செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் அப்துல் முத்தலிப் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேராவூரணி பகுதியில் 75க்கும் மேற்பட்ட கயிறு தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றின் உரிமையாளர்கள் பல கோடி ரூபாய் முதலீடு செய்து தொழிற்சாலையை நடத்தி வந்தனர். 5,000 குடும்பங்களுக்கு நேரடியாகவும், 3,000 குடும்பங்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளித்து கடந்த 15 ஆண்டுகளாக கயிறு தொழில் இயங்கி வந்தது. இந்நிலையில் 2018ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி வீசிய கஜா புயலால் அனைத்து தொழிற்சாலைகளும் முழுமையாக பலத்த சேதமடைந்தது. சேத விபரங்கள் மாவட்ட தொழில் மையம் மூலமாகவும், வருவாய்த்துறை மூலமாகவும் மதிப்பீடு செய்யப்பட்டு இழப்பீட்டு தொகையை நிர்ணயம் செய்து தமிழக அரசுக்கு பரிந்துரைத்தது.
ஆனால் பல கோடி ரூபாயை இழந்து பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் கயிறு தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை.