கரூர், மார்ச் 17: கோடையையொட்டி எலுமிச்சை விலைஉயர்ந்து வருகிறது.கோடைகாலம் துவங்கும் முன்பே கரூர் மாவட்டத்தில் வெயில் சுட்டெரிக்கிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட குளர்ச்சியை ஏற்படுத்தும் பானங்களில் எலுமிச்சை சாறு முதன்மையாக திகழ்கிறது. கரூர் மாவட்டத்தில் எலுமிச்சை சாகுபடி அதிகளவில் இல்லை. வெளி மாவட்டங்களில் இருந்தே தேவைக்காக எலுமிச்சை வரவழைக்கப்படுகிறது. திண்டுக்கல், புதுக்கோட்டை, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் இருந்து எலுமிச்சைபழம் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. உச்சத்தில் இருந்த எலுமிச்சை விலை கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் சரிந்தது. கிலோ ரூ.30 முதல் ரூ.40வரை விற்பனையாகிக்கொண்டிருந்தது.