ஆலந்தூர்: கிருஷ்ணன் சிலையை கடத்திய 2 பேரை சிலை திருட்டு தடுப்பு பிரிவு கைது செய்தனர். அவர்களிடம் எந்த கோயிலில் இருந்து திருடப்பட்டது என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை திரிசூலம் ரயில்நிலையம் அருகே மர்ம நபர்கள் சிலர் சாமி சிலையை விற்பனை செய்ய முயற்சி செய்து வருவதாக சிலை திருட்டு தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங்கிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்படி கூடுதல் கண்காணிப்பாளர் ஜோஷ்தங்கையா மற்றும் டிஎஸ்பி சுந்தரம் தலைமையிலான சிலை திருட்டு தடுப்பு பிரிவினர் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு திரிசூலம் ரயில் நிலையம் அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது திரிசூலத்தில் இருந்து ஜிஎஸ்டி சாலையை நோக்கி சந்ேதகத்திற்கு இடமான வகையில் கையுடன் பைக் ஒன்று வேகமாக வந்தது. இதை கவனித்த தனிப்படையினர் பைக்கை வழிமறித்து இருவரிடம் விசாரணை நடத்தினர்.அப்போது இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். அவர்கள் வைத்திருந்த பைக்கை சோதனை செய்தபோது, அதில் ஒரு அடி உயரம் கொண்ட உலோகத்தால் ஆன கை உடைந்த நிலையில் கிருஷ்ணன் சிலை இருந்தது.