ஆத்தூர், மார்ச் 13: கல்லேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், கல்லேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம், தலைமை ஆசிரியை அமுதா தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் ஜேஆர்சி அமைப்பின் சார்பில், ஆசிரியர் ஜோசப் ராஜ் கொரோனா வைரஸ் பரவும் முறைகள், அதனை தடுப்பது குறித்தும், எந்த வகையான உணவுகளை சாப்பிடுவது என்பது குறித்து மாணவ, மாணவிகள் மற்றும் கிராம மக்களுக்கு விளக்கிக் கூறினார்.