தடையை மீறி ஆர்ப்பாட்டம் பாஜகவினர் 80 பேர் கைது

சேலம், மே 11: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ராகுல் காந்தியின் ஆலோசகருமான சாம் பிட்ராடோவின் சர்ச்சைக்குரிய பேச்சை கண்டித்து, சேலம் கோட்டை மைதானத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர்கள் சுரேஷ்பாபு, சுதீர் முருகன் தலைமை வகித்தனர். சுற்றுச்சூழல் அணி மாநில தலைவர் கோபிநாத், கூட்டுறவு அணி தலைவர் வெங்கடாசலம், கோட்ட பொறுப்பாளர்கள் அண்ணாதுரை, முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் கலந்து கொண்டு, பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக, 4 பெண்கள் உள்பட 80 பேரை போலீசார் கைது செய்தனர்.

The post தடையை மீறி ஆர்ப்பாட்டம் பாஜகவினர் 80 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: