போலீஸ் அதிகாரிகளுடன் ஏடிஜிபி ஆலோசனை

சேலம், மே 15: தமிழக தலைமையிட ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் நேற்று சேலம் வந்தார். அவர் சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்ட எஸ்.பி.களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் ஒவ்வொரு மாவட்ட அமைச்சு பணியாளர்களின் கண்காணிப்பார்களும் கலந்து கொண்டனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல்துறை கட்டிடங்கள் பழுதாகியிருந்தால் சரி செய்வது, புதிய கட்டிடங்கள் கட்டவேண்டுமா? காவல்துறை வாகனங்கள் எவ்வளவு தேவை என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதே போல காவலர்களின் தேவைகள் குறித்தும் கேட்டார். பின்னர், ஆலோசனை கூட்டத்தை முடித்துவிட்டு கோவை புறப்பட்டு சென்றார்.

The post போலீஸ் அதிகாரிகளுடன் ஏடிஜிபி ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: