ஊத்துக்கோட்டை, மார்ச் 13: பெரியபாளையம் அருகே வெங்கல் கிராமத்தில் ஆரம்ப துணை சுகாதார நிலையம் நேற்று திறக்கப்பட்டது. பெரியபாளையம் அருகே வெங்கல் கிராமத்தில் ₹22 லட்சம் செலவில் அரசு துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டு 5 மாதங்களுக்கு மேல் ஆகிறது. இது திறக்கப்படாமல் மூடியே கிடந்தது. இந்த துணை சுகாதார நிலையத்தை திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், துணை சுகாதார நிலைம் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்திராணி லிங்கன் தலைமை தாங்கினார்.