பைக் மோதி விவசாயி பலி

கும்பகோணம், மார்ச் 13: கும்பகோணம் அடுத்த கோவிலாச்சேரி கீழத்தெருவை சேர்ந்த விவசாயி நாகராஜ் (55). இவர் தனது மனைவி வாசுகியுடன் நேற்று முன்தினம் அணைக்குடி சாலையில் நடந்து சென்றார். அப்போது நாகராஜ் மீது கோவிலாச்சேரியை சேர்ந்த அய்யப்பன் ஓட்டி வந்த பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த நாகராஜை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தன். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜ் இறந்தார். இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: