மன்னார்குடி, மார்ச் 11: மன்னார்குடி ராஜ கோபாலசாமி அரசினர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற தேசிய மாணவர் படை பொறுப்பாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான மின்னணு கழிவு மேலாண்மை கருத்தரங்கு நடைபெற்றது.மன்னார்குடி ராஜ கோபாலசாமி அரசினர் கலைக்கல்லூரி தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச் சூழல் அமைப்பு, நாகப்பட்டினம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் திருவாரூர் தேசிய மாணவர் படை இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பேராசிரியர் ரவி தலைமை வகித்தார். நாகை மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் ராஜன், தாவரவியல் துறை தலைவர் பேரா சிரியர் கோபிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மின்னணு கழிவுகளின் உலகளாவிய நிலமை அதனை மேலாண்மை செய்தல் குறித்து தஞ்சாவூர் தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ராம் மனோகர், மின்னணு கழிவு தேசிய நிலமை, அதனை சரி செய்யும் விதம், மின்னணு கழிவு நீக்குதலில் தாவரங்கள் பங்களிப்பு பற்றியும் கல்லூரி தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் முனைவர் பிரபாகரன் ஆகியோர் பேசினர்.