பொன்னேரி, மார்ச் 11: பழவேற்காட்டில் சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு குறித்து மாணவ காவல் படையினரின் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. தொடர்ந்து கடற்கரை பகுதியில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தி தூய்மை பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர். இதில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, திருவள்ளூரில் கொரோனா வைரஸ் காய்ச்சல் குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இன்னும் அவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்படவில்லை. முதியோர், குழந்தைகள் அதிகம் பேர் கூடும் இடங்களில் செல்லாமல் தவிர்க்க வேண்டும்.