ஆர்.கே.பேட்டை பகுதிகளில் பைக் திருடிய 2 வாலிபர்கள் கைது

பள்ளிப்பட்டு, மார்ச் 11: ஆர்.கே.பேட்டை பகுதியில் சமீப காலமாக இருசக்கர வாகனங்கள் திருடப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில், காவல் ஆய்வாளர் ஜெயராமன் தலைமையில்   தனிப்படை உதவி காவல் ஆய்வாளர் குமார் மேற்பார்வையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில்,  இரு சக்கர வாகனங்கள் திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய சோளிங்கரைச் சேர்ந்த சண்முகம் (25) என்பரை சந்தேகத்தில்பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில்,   ஆர்.கே.பேட்டை, திருத்தணி, சோளிங்கர் பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.  இவரது நண்பர், ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் பகுதியைச் சேர்ந்த நடராஜ் (26) ஆகிய வாலிபர்கள் இருவர் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து எட்டு இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: