காய்கறி கழிவுகளில் உரம் தயாரிப்பு கல்லூரி மாணவிகள் அசத்தல்

மதுரை, மார்ச் 11: மதுரை சொக்கிகுளம் உழவர் சந்தையில் வெளியேறும் காய்கறி கழிவுகள் மூலம், உரம் உள்ளிட்ட பொருட்களை கல்லூரி மாணவிகள் தயாரித்து, காட்சிக்கு வைத்து வாடிக்கையாளர்களுக்கு விளக்கம் அளித்தனர். மதுரை சொக்கிகுளம் உழவர் சந்தையில் பாலீதின் பை பயன்பாடு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. பாலிதீன் பைகளால் ஏற்படும் தீங்கு குறித்து, வாடிக்கையாளர்களுக்கு ஊழியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் உழவர் சந்தையில் காய்கறி, பழங்களின் கழிவுகள் மூலம் உரம், ஹேர்டை உள்ளிட்ட பொருள்களை தனியார் கல்லூரி தயாரித்து, டப்பாக்களில் அடைத்து காட்சிக்கு வைத்திருந்தனர். இது குறித்து உழவர் சந்தைக்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு எடுத்துக் கூறினார்.

Related Stories: