குடந்தையில் மாநில அளவிலான டேக்வாண்டோ கராத்தே போட்டி

கும்பகோணம், மார்ச் 10: கும்பகோணத்தில் இன்டிபென்டண்ட் டேக்வான்டோ அசோசியேஷன் ஆப் தமிழ்நாடு சார்பில் கருப்பு பட்டைக்கான டேக்வாண்டோ கராத்தே போட்டி நடந்தது. செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். இணை செயலாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தனராக எம்எல்ஏவும், டேக்வாண்டோ சங்க மாவட்ட தலைவருமான சாக்கோட்டை அன்பழகன், அகில இந்திய டேக்வாண்டோ சங்க தலைவர் ராமய்யா, அகில இந்திய டேக்வாண்டோ சங்க செயலாளர் பிரசாத் ஆகியோர் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.இந்த போட்டியில் தமிழகத்தில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் 30 பேர் வெற்றி பெற்றனர்.

Related Stories: