திருநின்றவூர், மார்ச் 10: ஆவடி அருகே திருநின்றவூர் பகுதியில் 400 அடி வெளி வட்ட சாலையில் உள்ள தடுப்பு சுவர் மீது பைக் மோதியதில் ஐசிஎப் ஒப்பந்த ஊழியர் பரிதாபமாக இறந்தார். ஆவடி அடுத்த திருநின்றவூர், நத்தமேடு, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத் (30). இவர் சென்னை, ஐசிஎப் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று மாலை கோபிநாத் வேலை முடிந்து ஐ.சி.எப்பில் இருந்து வீட்டுக்கு பைக்கில் புறப்பட்டார். இவர், வண்டலூர்- நெமிலிச்சேரி 400அடி வெளிவட்ட சாலை, பாலவேடு கிராமம் வழியாக பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது, அவரது பைக் திடீரென நிலை தடுமாறி சாலையோர தடுப்பு சுவர் மீது மோதியது.