உடுமலை, மார்ச் 10: உடுமலை கிளை நூலகம் எண் இரண்டில், உலக மகளிர் தின விழா மற்றும் சாதனை மகளிருக்கு விருது வழங்கும் விழா நூலக வாசகர் வட்டம் மற்றும் கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பில் நடந்தது. வாசகர் வட்ட தலைவர் இளமுருகு தலைமை வகித்தார். துணைத்தலைவர் சிவக்குமார், வாசகர் வட்ட ஆலோசகர் அய்யப்பன், பேராசிரியர் கண்டிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடுமலை பகுதியில் பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்ற 35 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு கோட்டாட்சியர் ரவிக்குமார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வதீபா ஆகியோர் நினைப்பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.