பாடாலூர், மார்ச் 6: ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே டிராக்டர் டிப்பரில் ஏற்றிச் சென்ற சோளத்தட்டையில் மின்சார கம்பி உரசி தீ பிடித்து எரிந்து சேதமடைந்தது. ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகேயுள்ள சீதேவிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். விவசாயியான இவர் பசுமாடுகளும் வளர்த்து வருகிறார். அதற்காக பாடாலூர் அருகே உள்ள ஒருவருடைய விவசாய நிலத்தில் இருந்து சோளத்தட்டையை விலைக்கு வாங்கி தன்னுடைய நிலத்திற்கு டிராக்டர் டிப்பரில் ஏற்றி சென்றார். டிராக்டரை சுரேஷ் என்பவர் ஓட்டிச் சென்றார்.