பெரியகுளம், மார்ச் 6: பெரியகுளத்தில் குடிபோதையில் நடு ரோட்டில் தகராறு செய்தவரை போலீசார் கைது செய்தனர். பெரியகுளம், தென்கரை, வள்ளுவர் சிலை அருகே 2 அரசு டாஸ்மாக் மதுபானக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளுக்கு பெரியகுளம் நகர் மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து நாள்தோறும் ஏராளமான மதுப்பிரியர்கள் வந்து மதுபாட்டில்களை வாங்கி, அங்கேயே மது குடித்துவிட்டு செல்கின்றனர். இந்த மதுக்கடை பகுதிக்கு அடுத்தாற்போல் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் உள்ளன. இங்கு கூடுதலாக மது அருந்திய மதுப்பிரியர்கள் தன்னிலை மறந்து நடுரோட்டிலேயே படுத்துவிடும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.மேலும் மதுபோதையில் தகராறிலும் ஈடுபடுகின்றனர்.