திருப்போரூர்: திருப்போரூரை அடுத்த கரும்பாக்கம் கிராமத்தில் இருளர் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் சுமார் 50க்கும் மேற்பட்ட இருளர் பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். இங்கு வசிப்பவர் நாகப்பன். இவருக்கு விஜி (20) என்ற மகனும், காமாட்சி (22) என்ற மகளும் உள்ளனர். காமாட்சிக்கு திருமணமாகி, அதே பகுதியில் உள்ள அவரது கணவர் சரத்குமார் (24) வீட்டில் வசிக்கிறார். சரத்குமாருக்கு குடிப்பழக்கும் உள்ளது. இதனால், தினமும் குடித்து விட்டு வந்து காமாட்சியை அடித்து உதைப்பதாக கூறப்படுகிறது. அப்போது அதே பகுதியில் வசிக்கும் விஜி, தனது அக்காவை அடிக்கடி அடிப்பது பற்றி சரத்குமாரிடம் தட்டிக் கேட்பார் என தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, வழக்கம்போல் சரத்குமார் குடித்து விட்டு வந்து, காமாட்சியை அடித்து உதைத்துள்ளார். இதையறிந்த விஜி, தனது அக்காவின் வீட்டுக்கு சென்று அவரை மீட்டு, தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். இதையடுத்து இரவு 9 மணியளவில் விஜி தூங்கிக் கொண்டிருந்தார்.