கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர். இதில் ஒருவர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து காயம் அடைந்தவர் உள்பட தப்பியோடிய கல்லூரி மாணவர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் ஆயுதங்களுடன் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் நேற்று காலை 7 மணியளவில் 7 பேர் கொண்ட கல்லூரி மாணவர்கள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் ஒரு மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்ததும் அங்கு ரயிலுக்கு காத்திருந்த ஏராளமான பயணிகள் அலறியடித்து நாலாப்புறமும் ஓடினர்.