சென்னை: சென்னை அடுத்த திருப்போரூர் கரும்பாக்கம் கிராமத்தில் வசிப்பவர் நாகப்பன். இவருக்கு விஜி (20) என்ற மகனும், காமாட்சி (22) என்ற மகளும் உள்ளனர். காமாட்சிக்கு திருமணமாகி, அதே பகுதியில் உள்ள அவரது கணவர் சரத்குமார் (24) வீட்டில் வசிக்கிறார்.சரத்குமாருக்கு குடிப்பழக்கும் உள்ளது. இதனால் தினமும் குடித்துவிட்டு வந்து காமாட்சியை அடித்து உதைத்துள்ளார். இதனை அதே பகுதியில் வசிக்கும் விஜி தட்டிக்கேட்பார் என தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் மாலை சரத்குமார் குடித்துவிட்டு வந்து, காமாட்சியை அடித்து, உதைத்துள்ளார். இதையறிந்த விஜி தனது அக்காவை வீட்டுக்கு அழைத்து சென்றார். இரவு 9 மணிக்கு விஜி தூங்கிக்கொண்டிருந்தபோது சரத்குமார் வந்து மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை விஜியின் முகத்தில் ஊற்றி தீ வைத்துள்ளார்.