வத்தலக்குண்டுவில் ஜெயசீலன் பள்ளி ஆண்டு விழா

வத்தலக்குண்டு, மார்ச் 5: வத்தலக்குண்டு ஜெயசீலன் மெமொரியல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 28வது ஆண்டு விழா நடந்தது. வத்தலக்குண்டு கல்வி மாவட்ட அலுவலர் திருநாவுக்கரசு தலைமை வகித்து பேசினார். பள்ளி தாளாளர் அருள்மாணிக்கம் வரவேற்றார். முதல்வர் மோகன் ஆண்டறிக்கை வாசித்தார். உசிலம்பட்டி குழந்தை இயேசு தேவாலய பங்குத்தந்தை ஜெய்ஜோசப் வாழ்த்தி பேசினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக டீன் நல்லகாமன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து சிறந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பட்டமளிக்கப்பட்டது. பின்னர் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆங்கில ஆசிரியை சிந்துஜா நன்றி கூறினார்.

Related Stories: