மாநில சிலம்பம் பழநி மாணவன் சாம்பியன் சாதனை

பழநி, மார்ச் 5: சென்னையில் நடந்த மாநில அளவிலான சிலம்ப போட்டியில் பழநி மாணவன் ஆட்டநாயகன் விருது பெற்று சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச மனிதநேய பல்கலைக்கழகம் சார்பில் சென்னையில் மாநில அளவிலான சிலம்ப போட்டி நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ- மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர். இதில் பழநியை சேர்ந்த 5ம் வகுப்பு மாணவர் ஆறுமுகம் முதல் பரிசு பெற்றார்.

மேலும் போட்டியின் ஒட்டுமொத்த சாம்பியனாக தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெற்ற ஆறுமுகத்தை அவரது பெற்றோர், பயிற்சியாளர் என பலர் பாராட்டி வாழ்த்தினர்.

Related Stories: