ஊத்துக்கோட்டை, மார்ச் 5: ஊத்துக்கோட்டை உட்கோட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க 1,500 இடங்களிலில் சிசிடிவி கேமரா பொருத்த ஏற்பாடு செய்யவேண்டும் என போலீசார் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊத்துக்கோட்டை உட்கோட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, வெங்கல், பென்னலூர்பேட்டை ஆகிய காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் ஆளினர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், டிஎஸ்பி சந்திரதாசன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் ஊத்துக்கோட்டை ரமேஷ், பெரியபாளையம் மகேஸ்வரி, வெங்கல் ஜெயவேல், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊத்துக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி வரவேற்றார்.