சாயப்பட்டறையின் மேல்நிலை குடிநீர் தொட்டி இடிந்து விழுந்து ஆலை உரிமையாளர் பலி

ஈரோடு, மார்ச் 5: ஈரோடு எல்லப்பாளையம் கொங்குவேலன் நகரை சேர்ந்தவர் சரவணன் (56). இவர், ராசாம்பாளையம் பகுதியில் 12 ஆண்டுகளாக சாயப்பட்டறை நடத்தி வந்தார். இங்கு 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், சரவணன் நேற்று மாலை சாயப்பட்டறையில் பணியாளர்களை கண்காணித்தபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, சாயப்பட்டறையில் இருந்த கான்கிரீட் மேல்நிலை நீர்த்தேக்க தேக்க தொட்டி திடீரென இடிந்து சரவணன் மேல் விழுந்தது. இதில், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

Related Stories: