கும்பகோணம், மார்ச் 4: கும்பகோணத்தில் அகில பாரதிய சன்னியாசி சங்கம் மற்றும் தென்பாரத கும்பமேளா மகாமகம் அறக்கட்டளை சார்பில் மாசிமகம் மகா ஆரத்தி பெருவிழா வரும் 8ம் தேதி நடக்கிறது. கும்பகோணத்தில் வரும் 8ம் தேதி மாசி மகத்தன்று அகில பாரதிய சன்னியாசி சங்கம் மற்றும் தென்பாரத கும்பமேளா மகாமகம் அறக்கட்டளை சார்பில் நீர்நிலைகளை பாதுகாத்தல், பராமரித்தல், நன்றி தெரிவித்தல் தொடர்பான சொற்பொழிவு, கலந்துரையாடல், சத்சங்கம் ஆகியவை காசிராமன் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடக்கிறது. இதில் சன்னியாசி சங்க தலைவர் பேரூர் ஆதீனம் அதிபர் சாந்தலிங்க மருதாச்சால அடிகள் தலைமை வகிக்கிறார். துணைத்தலைவர் ராமானந்தா சுவாமி முன்னிலை வகிக்கிறார்.மாலை 5 மணிக்கு சிவவாத்திய இசைக்கருவிகள், மங்கள வாத்தியம் முழங்க மகாமக குளத்தை தீர்த்தவலம் வரும் திருச்சுற்று நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஆதீனங்கள், மடாதிபதிகள், துறவியர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று ஆரத்தி வழிபாடு செய்யவுள்ளனர்.