சத்தியமங்கலம், மார்ச் 4:ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர். அதிகாலை 4 மணிக்கு துவங்கும் தீ மிதி விழா மாலை 4 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் பக்தர்கள் குண்டம் இறங்குவர். இத்தகைய சிறப்பு வாய்ந்த குண்டம் திருவிழா மார்ச் 23ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.