பங்களாபுதூர் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆண்டு விழா

குளித்தலை. மார்ச் 3: குளித்தலை அடுத்த பங்களாபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் ராஜலட்சுமி தலைமைை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருநாவுக்கரசு, ஒன்றிய கவுன்சிலர் கவுரி, பள்ளி மேலாண்மைகுழு தலைவர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை சித்ரா அனைவரையும் வரவேற்றார். அறிவியல் ஆசிரியர் பாலசுப்ரமணியன் ஆண்டறிக்கை வாசித்தார். இவ்விழாவில் கலந்துகொண்ட வட்டார கல்வி அலுவலர் அசோகன் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டி பேசினார். தலைமை ஆசிரியர்கள் கீதா பழனிவேலு, மனோகரன், தேக்கமலை முத்துலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் ஊர் முக்கியஸ்தர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் மணிகண்டன் நன்றி கூறினார்.

Related Stories: