திருப்பூர்,மார்ச்3:திருப்பூரில், குடியுரிமை சட்டத்தை கண்டித்து போராடியவர்கள் மீது நடத்திய வன்முறை கண்டித்து அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பினர் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு கடந்த இரண்டு மாத்திற்கு முன்னாள் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தாக்கல் செய்தது நிறைவேற்றினர். இந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதா இஸ்லாமியர்களுக்கு இலங்கை தமிழர்களுக்கும் எதிரானது என கூறி பல்வேறு இடங்களில் மாணவர்கள், அரசியல் கட்சியினர், உள்ளிட்ட பலதரப்பட்டோர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.