திருமுல்லைவாயலில் மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு

திருமுல்லைவாயல், மார்ச் 2: திருமுல்லைவாயலில் மூதாட்டியை வழிமறித்து தங்கச்சங்கிலியை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், வைஷ்ணவி நகர், 4வது தெருவை சேர்ந்தவர்  யமுனாதேவி (75). இவர் நேற்று முன்தினம் இரவு தனது பேத்தியுடன் அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, அதே தெருவில் பைக்கில் வந்த ஒரு வாலிபர் யமுனாதேவியை வழிமறித்தார். மின்னல் வேகத்தில்  அவரது கழுத்தில் கிடந்த 3 சவரன் சங்கிலி பறித்துக்கொண்டு தப்பி சென்றார்.  புகாரின்பேரில் திருமுல்லைவாயல் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் வழிப்பறி செய்த நபரை தேடி வருகின்றனர்.

Related Stories: