சென்னை, மார்ச் 2: வில்லிவாக்கத்தில் தனது சொந்த சகோதரியின் கை, கால்களை கட்டிவைத்து பாலியல் தொல்லை கொடுத்த கொடூர சகோதரனை போலீசார் கைது செய்தனர்.வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி. இவர் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது;எனது தந்தையும், தாயும் குடும்பத்தகராறு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்துவிட்டனர். எனக்கு 15 வயதில் ஒரு சகோதரன் இருக்கிறான். என் தாய் வேறொருவரை 2வது திருமணம் செய்து, அதே பகுதியில் குடும்பம் நடத்தி வருகிறார். இதனால் எங்கள் வீட்டில் நானும் சகோதரனும் வசித்து வந்தோம். கடந்த சில மாதங்களாக எனது கை, கால்களை கட்டி போட்டு, எனது சகோதரன் பலமுறை பாலியல் தொல்லை கொடுத்தார். அவரிடம் இருந்து தப்பிவந்துள்ளேன். எனவே, சகோதரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.