வழிப்பறி கொள்ளையர் 2 பேர் சிக்கினர்

பூந்தமல்லி, மார்ச் 1: சென்னை மதுரவாயலை சேர்ந்தவர் ஆறுமுகம் (50). இவர் வானகரம் சர்வீஸ் சாலை அருகே வாகனங்களை பார்க்கிங் செய்யும் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு  சர்வீஸ் சாலை வழியாக நடந்து சென்றார்.அப்போது அங்கு வந்த 2 பேர் முகவரி கேட்பது போல் நடித்து, தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை ஆறுமுகத்தின் கழுத்தில் வைத்து மிரட்டி, ₹1000 மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

இதனை கண்டதும் ஆறுமுகம் கூச்சல் போட்டதையடுத்து அங்கிருந்த லாரி டிரைவர்கள் விரட்டிச் சென்று இருவரையும் மடக்கிப் பிடித்தனர். பின்னர் மதுரவாயல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  விசாரணையில்,  ஓட்டேரியைச் சேர்ந்த முருகன்(38), தண்டையார்பேட்டையைச் சேர்ந்த அப்துல் கரீம்(36) என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து பணம் மற்றும் செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். இருவரையும் போலீசார் கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: