மாவட்டம் பொதுமக்கள் குற்றச்சாட்டு மாலையில் செவன்த் டே பள்ளி ஆண்டு விழா

கோபால்பட்டி, பிப். 28: திண்டுக்கல்- நத்தம் ரோடு பொன்னகரத்தில் உள்ள செவன்த் டே அட்வண்டிஸ்ட் மெர்டிக் மேல்நிலைப்பள்ளியில் 40ம் ஆண்டு விழா நடைபெற்றது. செவன்த் டே தென்கிழக்கு இந்திய ஒன்றியத்தின் தலைவர் டேனியல் தேவதாஸ் தலைமை வகித்தார். பொருளாளர் மோகன், இணை செயலாளர் ஆர்தர் பாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவில் மாணவ, மாணவியரின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதில் 5ம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் ராணுவ உடையில் தேசிய கொடியேந்தி நாட்டுப்பற்றை விளக்கும் வகையில் அணிவகுத்தது அனைவரது பாராட்டை பெற்றது. தொடர்ந்து 10, 11, 12 ஆகிய பொதுத்தேர்வுகளில் மாணவ, மாணவிகள் வெற்றி பெற சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. பள்ளி முதல்வர் ஜோசப் தாமஸ் நன்றி கூறினார்.

Related Stories: