கீழ்வேளூர், பிப். 28: நாகை அருகே முன்னாள் அரசு பஸ் டிரைவர் வீட்டில் நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் டிரைவரை தாக்கி16 பவுன் நகைகளை பறித்து சென்றனர்.நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள பொரவாச்சேரி என்ற கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்(60), ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக டிரைவர். இவரது மனைவி பொன்னீஸ்வரி(50), இவர்களது வீட்டுக்கு 2 தினங்களுக்கு முன் பன்னீரின் தங்கை ராணி(48) சென்னையில் இருந்து வந்திருந்தார்.நேற்று முன்தினம் இரவு 3 பேரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவில் 3 மர்ம நபர்கள் பின்பக்க வாசல் வழியாக வீட்டுக்குள் புகுந்தனர். அங்கு தூங்கி கொண்டிருந்த ராணி கழுத்தில் கிடந்த 7 பவுன் செயினை பறித்தனர். இதனால் திடுக்கிட்டு விழித்த அவர் திருடர்களை பார்த்து அலறினார்.
இதனால் அருகில் தூங்கி கொண்டிருந்த பொன்னீஸ்வரி எழுந்தார். அப்போது அவர் கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினையும் பறித்துக்கொண்டனர். செயினை இழுத்து பறித்ததால் இருவருக்கும் கழுத்தில் காயம் ஏற்பட்டது.