விவசாயிகள் அவதி நாகையில் 28ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாகை,பிப்.26: விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 28ம் தேதி நாகை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது என்று கலெக்டர் பிரவீன்பிநாயர் தெரிவித்துள்ளார். விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 28ம் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக முதன்மை கூட்ட அரங்கில் நடக்கிறது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரவீன்பிநாயர் தலைமை வகிக்கிறார். நாகை மாவட்ட விவசாயிகள், சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்து பயன்பெறுலாம் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: