அவிநாசி,பிப். 26: தமிழர் பண்பாட்டு கலாசார பேரவை அறக்கட்டளை செயற்குழுக்கூட்டம் அவிநாசியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரவையின் தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் செயலாளர்கள் அந்தோணிசாமி, அருணாசலம், வெங்கடாசலம், பொருளாளர் ராயப்பன், துணை தலைவர்கள் அப்புசாமி, சாமிநாதன், பணி நிறைவு ஆசிரியர் கூட்டமைப்பின் மாநிலத்தலைவர் சுப்ரமணியம் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில், தமிழகத்தில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்கிற உன்னத நிலைக்கு தாய்மொழியாம் தமிழை தழைத்தோங்க செய்ய வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்திற்காகவும், தமிழே ஆட்சி மொழி என்பதை தமிழக அரசு அனைத்து துறைகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழக தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் கல்லூரி கல்விகளில் தமிழ் வழிக்கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் தமிழே கற்றுத்தராத பள்ளிகளில் தமிழ் மொழிப்பாடம் கற்றுத்தர செய்ய வேண்டும்.