சென்னை, பிப். 20: முதல் மனைவியை ஏமாற்றி 2வது திருமணம் செய்த காவலர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் சேர்ந்தவர் சத்தியவாணி (27). இவர், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரின் கூறியதாவது. சிவகங்கை மாவட்டம் சேர்ந்தவர் ராஜா (27). இவர், தற்போது தமிழ்நாடு சிறப்பு காவல்படை காவலராக பணிபுரிந்து வருகிறார். ராஜா. ராஜபாளையத்தில் காவலராக பணிபுரிந்தபோது சத்தியவாணியும் காதலித்தனர்.இந்நிலையில் காவலர் ராஜா, 27:10:2017ல் வடபழனி முருகன் கோவியிலில் சத்தியவாணியை திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்து உடல் நிலை சரி இல்லாமல் இறந்துவிட்டது. அதன் பின்பு தன்னுடைய மனைவியுடன் சரிவர பேசாவில்லை. இதனால் கணவர் மீது மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டதால் கணவர் செல்போனை எடுத்து சோதனை செய்யும் போது ஒரு பெண்ணிடம் திருமணம் செய்து கொண்ட படம் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.