உத்தமபாளையம், பிப்.20: உத்தமபாளையம்-பழனிசெட்டிபட்டி வரை முல்லையாற்றில் தண்ணீர்செல்லும் வழித்தடங்களில் பராமரிப்பு பணிகளை பொதுப்பணித்துறை செய்யவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் கிடு கிடு என சரிந்து வருகிறது. கம்பம் பள்ளதாக்கில் ஒரு சில இடங்களில் இரண்டாம் போக நடவிற்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். காரணம் போர்வெல் மூலம் செய்யப்படும் விவசாயத்திற்கு இது ஏதுவாக உள்ளது. ஆனால் மாவட்டத்தில் அனைத்து ஊர்களுக்கும் இன்னும் குடி தண்ணீர் தேவைப்படுகிறது.
இதனால் பெரியாற்றில் தண்ணீர் திருட்டை தடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்போது முள்புதர்களாலும், நீர்வழித்தடங்களில் ஏற்படக்கூடிய குப்பைகூளங்களாலும் தண்ணீர் தேங்குகிறது. இருந்தபோதிலும் இந்த தண்ணீர் விவசாயத்திற்கும் குடிநீர்க்கும் பயன்படுத்தப்படுகிறது.