வருசநாடு அருகே தூங்கும் தார்ச்சாலை பணி பல மாதங்களாக கிடப்பில் கிடக்கு...

வருஷநாடு, பிப். 19: வருசநாடு அருகே, பல மாதமாக கிடப்பில் போடப்பட்ட தார்ச்சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வருசநாடு அருகே காமராஜபுரம் உரக்குண்டான்கேணி, பால சுப்பிரமணியபுரம், ராமசாமிநகர், கவுண்டர் குடிசை உள்ளிட்ட கிராமங்களின் வழியாக செல்லும் சாலையில் தார்ச்சாலை அமைக்கும் பணி 6 மாதத்திற்கு முன்பு தொடங்கியது. ஆனால், ஜல்லிக்கற்கள் பதித்த நிலையில் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால், அப்பகுதி செல்லும் கிராம பொதுமக்கள் வாகனங்களில் செல்ல சிரமப்படுகின்றனர். மேலும், பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும்பொழுது அவதிப்படுகின்றனர். சாலைப் பணியை விரைந்து முடிக்கக்கோரி, பலமுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.

இது குறித்து காமராஜபுரத்தை சேர்ந்த தங்கப்பெருமாள் கூறுகையில், ‘பல மாதங்களாக சாலைப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் ஒவ்வொரு நாளும் வருசநாடு, கடமலைக்குண்டு ஆகிய கிராமங்களுக்கு செல்ல சிரமப்படுகிறோம். எனவே, சாலைப் பணியை விரைந்து முடிக்க தேனி கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: